தமிழ்நாடு ஒற்றை சாளர இணையதளம் என்பது முதலீட்டாளர்கள் அனைத்து வணிகத் தொடர்பான அனுமதிகள் / உரிமங்கள் / ஒப்புதல்கள் / NOC-களை இணையதளம் வாயிலாக, காலக்கெடு நிர்ணயத்துடன், வெளிப்படையாகவும் சிரமமில்லாத முறையிலும் பெறுவதற்கான ஒருங்கிணைந்த தளமாகும். இந்த தமிழ்நாடு ஒற்றை சாளர இணையதளம், 30-க்கும் மேற்பட்ட அரசு துறைகள் / முகமைகளின் 200-க்கும் மேற்பட்ட சேவைகளை உள்ளடக்கியதாக இருந்து, தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களுக்கான வணிகச் செயல்முறை எளிமைப்படுத்தி (Ease of Doing Business - EoDB) மேம்படுத்தவும், அரசு-வணிக (G2B) தொடர்பை காகிதமற்ற மற்றும் தொடர்பற்ற முறையாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.